விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வெப்பத்தால் 2 பச்சிளம் குழந்தைகள் பலி!

கோட்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 மே 2024, 5:18 pm

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதாரத் துறையின் 14 ஊழியர்கள் மீது விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறையில் குளிரூட்டிகள் இல்லாததாலும், மின்விசிறிகள் பயனற்றதாலும், வெப்பம் காரணமாக குழந்தைகள் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சுகேத் சமூக சுகாதார மையத்தில் மருத்துவ பணியாளர்களின் அலட்சியம் காரணமாக புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், கோட்டா மண்டலத்தின் இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டதன் மூலம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.