ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதாரத் துறையின் 14 ஊழியர்கள் மீது விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறையில் குளிரூட்டிகள் இல்லாததாலும், மின்விசிறிகள் பயனற்றதாலும், வெப்பம் காரணமாக குழந்தைகள் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
சுகேத் சமூக சுகாதார மையத்தில் மருத்துவ பணியாளர்களின் அலட்சியம் காரணமாக புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், கோட்டா மண்டலத்தின் இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டதன் மூலம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










