மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ரூ. 20 கோடி தங்கம், வைரம், வெள்ளி பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் தேர்தலையொட்டி கண்காணிப்பு பணிகள் தீவிரம்

News image

கோப்புப் படம்

Updated On :2 நவம்பர் 2024, 7:03 am

மகாராஷ்டிரத்தில் ரூ. 20 கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மகாராஷ்டிரத்தில் நவ. 20 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அஹில்யாநகர் மாவட்டத்தில் 3 பேர் ஒன்றாக வந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அவர்களிடம் சுமார் ரூ. 24 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் இருப்பது தெரிய வந்தது.

அதற்குண்டான ரசீது என்று கூறி, அவர்கள் அளித்த சீட்டில் இருந்த நகைகளின் எண்ணிக்கையானது, அவர்கள் கொண்டு வந்திருந்த நகைகளின் எண்ணிக்கைக்கு மாறாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.