அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ரூ. 20 கோடி தங்கம், வைரம், வெள்ளி பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் தேர்தலையொட்டி கண்காணிப்பு பணிகள் தீவிரம்

News image

கோப்புப் படம்

Updated On :2 நவம்பர் 2024, 12:33 pm IST

மகாராஷ்டிரத்தில் ரூ. 20 கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மகாராஷ்டிரத்தில் நவ. 20 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அஹில்யாநகர் மாவட்டத்தில் 3 பேர் ஒன்றாக வந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அவர்களிடம் சுமார் ரூ. 24 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் இருப்பது தெரிய வந்தது.

அதற்குண்டான ரசீது என்று கூறி, அவர்கள் அளித்த சீட்டில் இருந்த நகைகளின் எண்ணிக்கையானது, அவர்கள் கொண்டு வந்திருந்த நகைகளின் எண்ணிக்கைக்கு மாறாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.