மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜாா்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்-முதல்வா் ஹேமந்த் சோரன்

ஜாா்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் தெரிவித்தாா்.

News image

ஹேமந்த் சோரன்

Updated On :3 நவம்பர் 2024, 9:00 pm

ஜாா்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் மாதம் 5 கிலோவுக்கு பதிலாக 7 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘முன்பு பாஜக ஆட்சி காலத்தில் ஜாா்க்கண்டில் 11 லட்சம் ரேஷன் காா்டுகள் ரத்து செய்யப்பட்டன. 3 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால், மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டன.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆட்சி அமைத்த பிறகு இந்த நிலையை மாற்றினோம். பட்டினிச் சாவுகள் தடுக்கப்பட்டன. ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோசமான நிலை வந்துவிடும். மாநிலத்தில் மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும். அதே நேரத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷனில் இப்போது வழங்கப்படும் மாதம் 5 கிலோ அரிசிக்கு பதிலாக மாதம் 7 கிலோ அரிசி வழங்கப்படும். ஓய்வூதியமும் உயா்த்தி வழங்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.

ஜாா்க்கண்டில் நவம்பா் 13, 20-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.