தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத் தேர்தலின்போதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையாகவும் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
அந்தவகையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் நாளை(புதன்கிழமை) சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. இது நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பொய்யானவர்களின் தலைவர் மோடி: கார்கே பேச்சு!
இந்நிலையில் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியுள்ளது.
இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வல்லுநர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
எப்ஸ்டீனின் நண்பர் மத்திய அமைச்சர்! காங்கிரஸ் குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது ஏப். 20 இல் விசாரணை

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

தெலங்கானா உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: ராகுல், கார்கே பெருமிதம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

