தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வன்முறை சம்பவத்தை படம்பிடித்து விடியோ பதிவிட்ட 2 பத்திரிகையாளர்கள் கைது!

வன்முறைக் காட்சிகளை உள்ளூர் செய்தித் தளத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 12:34 pm

வன்முறை சம்பவத்தை படம்பிடித்து விடியோ பதிவிட்ட குற்றச்சாட்டில் பத்திரிகையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நார்த் 24 பார்கனாஸ் மாவட்டத்தின் தக்‌ஷிந்தரி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன், நடைபெற்ற காளி பூஜை நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், சம்பவ இடத்தில் நிகழ்ந்த வன்முறைக் காட்சிகளை படம்பிடித்து தங்களுக்குச் சொந்தமானதொரு உள்ளூர் செய்தித் தளத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வன்முறை தொடர்பான இந்த காட்சிகள், சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக, விடியோ பதிவிட்ட இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், செய்தி நிறுவன அலுவலகத்திலிருந்து கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல்ல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.