மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

பாபா சித்திக்

Updated On :7 நவம்பர் 2024, 9:34 pm IST

மகராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை தொடர்பான வழக்கில் மேலும் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணேவின் கர்வேநகர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா குலாங்கர், ரபீக் நியாஸ் ஷேக் ஆகிய இருவரும் பாபா சித்திக்கின் கொலையில் முக்கியக் குற்றவாளியான பிரவின் லோங்கர் மற்றும் மற்றொரு குற்றவாளியான ரூபேஷ் மொஹோல் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட லோங்கர் மற்றும் மொஹோல் ஆகிய இருவரும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள குலாங்கர் மற்றும் ஷேக் ஆகியோரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சித்திக் (66) கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது மகன் கட்சி அலுவலகத்தின் வெளியே சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.