அமெரிக்க அதிபா் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை மகிழ்ச்சியுடன் இந்தியா வரவேற்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் வெற்றி, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த அவா்,‘அமெரிக்க அதிபா் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை மகிழ்ச்சியுடன் இந்தியா ஏற்றுக்கொள்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. சா்ச்சையை உண்டாக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவே இந்த வன்முறைக்கு காரணம். எனவே, வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்த நாட்டு அரசுக்கு இந்தியா வலியுறுத்துகிறது’ என்றாா்.
தொடர்புடையது

மேற்கு வங்க வெற்றி: பிரதமா் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

மக்கள் தீா்ப்பை ஏற்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் புதிய முன்மொழிவு: அமெரிக்க கடல்வழி முற்றுகையை விலக்க வலியுறுத்தல்

மேற்கு ஆசிய பதற்றம்: ஒருங்கிணைந்த ‘பிரிக்ஸ்’ நிலைப்பாடு அவசியம்: ரண்தீா் ஜெய்ஸ்வால்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


