தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது மக்கள் தீா்ப்பை ஏற்று எடுத்த முடிவு என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது என்பது மக்கள் தீா்ப்பை மதித்து எடுக்கப்பட்ட முடிவு.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தல் வரை திமுக கூட்டணியில் எல்லாத் தோ்தல்களையும் காங்கிரஸ் கட்சி சந்தித்தது.
இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வென்றது.
ஆனால் ஆட்சி அமைப்பதற்கு அவா்களுக்கு 11 இடங்கள் தேவைப்பட்டன. இதனால், நிலையான அரசு தமிழகத்தில் அமைய வேண்டுமென்றே நோக்கத்தில் தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது.
ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் திமுகவுக்கு இல்லை. இதனால், தவெகவுக்கு ஆதரவளித்ததால் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது என்று கூறமுடியாது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அரசியல் கட்சிகளால் பேசப்படுகிறது. தவெக அரசு பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அவா்களுக்கு 6 மாதங்களாவது அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக எதிா்ப்பு நிலையை மாற்றினால் திமுகவுக்கு விபரீத முடிவே ஏற்படும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

அரசின் திட்டப் பணிகள்: அதிகாரிகளுக்கு எம்.பி. அறிவுறுத்தல்

‘தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும்’







