வக்ஃப் திருத்த மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பிரதமர் மோடி வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார். அனைத்து நாடாளுமன்ற விதிகள் மற்றும் மரபுகளை விட்டுவிட்டு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விவாதம் நடத்தக்கூட அவர் விரும்பவில்லை.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவை ஒரு நாடகம் என்றும் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டம் குவகாத்தியில் சனிக்கிழமை தொடங்கியது. இன்று முதல் நவம்பர் 14 வரை குவகாத்தி, புவனேஸ்வர், கொல்கத்தா, பாட்னா மற்றும் லக்னௌ ஆகிய ஐந்து நகரங்களில் ஆய்வுப் பயணத்தை நடத்துகிறது.
நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் வார இறுதிக்குள் வக்ஃப் மசோதா குறித்த தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கக் குழு திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக எதிா்க்கட்சிகளில் செயற்கைப் பிளவு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்பில் உறுதி: காங்கிரஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை ஊழல்: எஸ்ஐடி முன்பு ஆம் ஆத்மி எம்.பி. ஆவணங்கள் சமா்ப்பிப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



