கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

விளையாட்டால் ஒன்றரை கோடி வேலைவாய்ப்பு!

விளையாட்டு சந்தையினால் 2030-க்குள் 21 பில்லியன் டாலர் மறைமுகமான வரி வருவாயும் கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பு

News image
Updated On :14 நவம்பர் 2024, 7:10 pm IST

இந்தியாவின் விளையாட்டுச் சந்தை 2030 ஆம் ஆண்டில் 130 பில்லியன் டாலர்களை 14 சதவிகித கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) எட்டும் என்று கூகிள் மற்றும் டெலாய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவின் விளையாட்டு சந்தையின் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை கோடி வேலைவாய்ப்புகளும், 21 பில்லியன் டாலர் மறைமுகமான வரி வருவாயும் கிடைக்கும். இந்த வளர்ச்சியானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்கு வேகமாகும்.

2030 ஆம் ஆண்டுக்குள் விளையாட்டு பொருள்கள், ஆடை சந்தை மதிப்பு 58 பில்லியன் டாலராக இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தளங்களின் எழுச்சி இந்தியாவில் விளையாட்டு நுகர்வு மீது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜென் இசட் தலைமுறையினரின் இடையில்தான், டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு நுகர்வு மிக அதிகமாக உள்ளது. இந்த தலைமுறையினர்தான் 93 சதவிகிதம் பேர், மற்ற தலைமுறையினரைவிட அதிகமாக டிஜிட்டல் தளங்களை உபயோகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.