திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கங்குவா நடிகையின் தந்தையிடம் ரூ. 25 லட்சம் மோசடி!

அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஜக்தீஷ் சிங் பதானியிடம் ரூ. 25 லட்சம் மோசடி

News image
ஜக்தீஷ் சிங் பதானி - திஷா பதானி- கோப்புப் படம்
Updated On :16 நவம்பர் 2024, 7:41 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் ஜக்தீஷ் பதானிக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கதாநாயகியான திஷா பதானியின் தந்தை ஜக்தீஷ் சிங் பதானி துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். உத்தரப் பிரதேசத்தின் பரேய்லியில் வசிக்கும் இவரை, சமீபத்தில் தொடர்பு கொண்ட ஷிவேந்திர பிரதாப் சிங் என்பவர், ஜக்தீஷுக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். மேலும், அவரை தனது கூட்டாளிகளிடமும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார், ஷிவேந்திர பிரதாப்.

இந்த நிலையில், ஜக்தீஷுக்கு அரசியலில் அல்லது உயர்மட்ட அரசுப்பணி வாங்கித் தருவதாக ஷிவேந்திர பிரதாப் பொய்யான வாக்குறுதி அளித்திருந்தார். மேலும், அதற்கு பணம் தேவைப்படும் என்றும் கோரியுள்ளனர். இதனை நம்பிய ஜக்தீஷ், ரொக்கமாக ரூ. 5 லட்சமும், ரூ. 20 லட்சத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளிலும் செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பணம் செலுத்தி 3 மாதங்களாகியும், எவ்வித பதவியோ பதிலோ அளிக்காமல் இருந்ததால், கொடுத்த பணத்தை ஜக்தீஷ் கோரியுள்ளார்.

இருப்பினும், கண்டிப்பாக பதவி அளிக்கப்படும் என்று ஷிவேந்திராவும் அவரது கூட்டாளிகளும் சமாளித்துள்ளனர். இருந்தபோதிலும், பணத்தைத் தந்தால் மட்டும் போதும் என்று ஜக்தீஷ், ஷிவேந்திராவின் கூட்டாளிகளைத் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், பணத்தையும் தரவியலாது; பதவியும் ஒன்றும் கிடையாது என்று ஷிவேந்திரா கூறியுள்ளார்.

இதனையடுத்து, தன்னை மோசடி செய்து விட்டதாக ஷிவேந்திர பிரதாப் மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் ஜக்தீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.