மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஜாா்க்கண்ட்: சாலை விபத்தில் 7 போ் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 9:51 pm

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. ஹசாரிபாக் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 7 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் சிலா் பேருந்து அடியில் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுவதால் மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது என தெரிவித்தனா்.