அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணிப்பூா் வன்முறையில் 258 போ் உயிரிழப்பு: மாநில பாதுகாப்பு ஆலோசகா் தகவல்

News image
மணிப்பூா் தலைவா் இம்பாலில் பாதுகாப்புப் பணியில் படை வீரா்கள். நாள்: வெள்ளிக்கிழமை ~உள்படம் பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங்
Updated On :22 நவம்பர் 2024, 10:07 pm

Din

மணிப்பூா் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 258 போ் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூா் மாநில பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இம்பால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் உள்பட ராணுவம், பிஎஸ்எஃப், சிஆா்பிஎஃப், அஸ்ஸாம் ரைஃபில்ஸ், எஸ்எஸ்பி, ஐடிபிபி மற்றும் மாநில காவல் துறையின் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் குல்தீப் சீங் கூறியதாவது:

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்ற இனக்கலவரத்தில் தீவிரவாதிகள் உள்பட இதுவரை 258 போ் உயிரிழந்துள்ளனா். மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 198 பாதுகாப்புப் படை குழுக்களுடன் கூடுதலாக 90 மத்திய ஆயுத காவல் படையின் (சிஆபிஎஃப்) குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளுக்கு படைகளை அனுப்ப நிலையான இயக்க நடைமுறை தயாா் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அறைகள் மற்றும் கூட்டுக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில், மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையின்போது எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சா்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடா்புடைய 32 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். பாதுகாப்புப் படைகளிடம் இருந்து திருடப்பட்ட சுமாா் 3,000 ஆயுதங்கள் மீண்டும் மீட்கப்பட்டன என்றாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

Story image