ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எம்.பி. சு. வெங்கேடசனை விமர்சித்த பாஜக செயலர்!

பாஜக செயலரின் பதிவுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆதரவு

News image
டாக்டர் எஸ்.ஜி. சூர்யா - எம்.பி. சு. வெங்கேடசன்- கோப்புப் படம்
Updated On :24 நவம்பர் 2024, 8:55 am

DIN

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதியை மாற்றியமைக்குமாறு எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததை விமர்சித்து தமிழக பாஜக செயலாளர் பதிலளித்துள்ளார்.

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாள்களில் பட்டயத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை குற்றஞ்சாட்டியதுடன் தேர்வு தேதிகளை மாற்றியமைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கோரிக்கை விடுத்து மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

தேர்வு தேதியை மாற்றியமைக்கக் கோரி எம்.பி. வெங்கடேசன் எழுதிய கடிதம்

தேர்வு தேதியை மாற்றியமைக்கக் கோரி எம்.பி. வெங்கடேசன் எழுதிய கடிதம்

இந்த நிலையில், பட்டயக் கணக்காளர் தேர்வை மத்திய அரசு நடத்தவில்லை என்றும், தமிழகம்தவிர வேறுசில மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் தமிழக பாஜக செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா பதிலளித்துள்ளார்.

டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``பொங்கல் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களிலும் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உத்தரப் பிரதேசத்தில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் மாஹி, வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என்றும் கொண்டாடப்படுகிறது.

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதிகளை முடிவு செய்வது மத்திய அரசோ, நிதி அமைச்சகமோ இல்லை. தன்னாட்சி பெற்ற இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) எனும் அமைப்புதான் தேர்வை முடிவு செய்யும். தேர்வு தேதியை முடிவு செய்வதற்கு ஐசிஏஐ-க்கு சில நெறிமுறைகளும் உண்டு. அதனைக் கருத்தில் கொண்டுதான் தேர்வு தேதிகளை முடிவு செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக செயலரின் பதிவைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்கு கருத்தும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.