காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை மகாயுதி தலைவர்களும் பாஜக தலைமையும் முடிவு செய்வார்கள். காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எந்தக் கட்சிக்கும் போதிய இடங்கள் கிடைக்காததற்கு காங்கிரஸின் பொய்களே காரணம் என்றார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 132 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
மற்றொருபுறம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணிக்கு வெறும் 50 இடங்களே கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக இடங்களை ‘மகாயுதி’ கூட்டணி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வராக விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்! எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக

தொழிலை விட்டுவிட்டு விஜய் வந்துள்ளார்! மக்கள் முடிவெடுப்பார்கள்! எஸ்.ஏ. சந்திரசேகர்
ரூ. 200 கோடி பங்களா குற்றச்சாட்டு! கேரள பாஜக தலைவர் வேட்புமனு ஏற்பு!
விடியோக்கள்

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

