
தமிழ்நாடு
இன்றைய செய்திகள் ஜூலை 21 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

சிஜேபி போராட்டம் - PTI
அவர் உடல்நிலை மீது அரசைவிட எங்களுக்கு அதிக அக்கறை உண்டு: சோனம் வாங்சுக் மனைவி
சோனம் வாங்சுக் உடல்நிலை மீது அரசைவிட எங்களுக்கு அதிக அக்கறை உண்டு என அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ இன்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு!
நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு கைதான நிலையில் முதல்வர் விஜய்யை பாடகர் அறிவு சந்தித்தார்.
சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!
தில்லியில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றம் முடங்கியது
சிஜேபி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களை காவல்துறையினர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
உக்ரைனில் சரக்குக் கப்பல் மீது ரஷியா தாக்குதல்: திருமணம் நிச்சயமான கேரள மாலுமி பலி!
உக்ரைன் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதில், கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.
விஜய்யை தூக்கிப் பிடிப்பதில் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே சண்டை! அதிமுக கிண்டல்!
விஜய்யை தூக்கிப் பிடிப்பது யார் என்பதில் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே போட்டி நடைபெறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கிண்டலாகப் பேசியுள்ளார்.
ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு
சிஜேபி ஆதரவாளர்கள் மீதான தாக்குதல், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார்.
மத்திய அமைச்சர் விளக்கம்
நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் பக்கம் நிற்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்ஜெட் தாக்கல் குறித்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று அறிவித்தபோது, செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
தமிழக பட்ஜெட் எப்போது? தேதிகளை அறிவித்தார் அவைத் தலைவர்!
ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று அறிவித்தார்.
சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து
சிக்கிமில் சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது மீத்தேன் வாயு வெடித்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெங்கு தடுப்பூசி
இந்தியாவில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரகம் (டிசிஜிஐ) சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டகேடா (Takeda) மருந்து நிறுவனத்தின் QDENGA (TAK-003) என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கே
தில்லியில் நடந்த சிஜேபி கட்சிப் போராட்டத்தில் மாணவர்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு அந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மன்னிப்பு கோரியுள்ளார்.
ஷம்பு எல்லை மூடல்
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் விவசாயிகள் இன்று(ஜூலை 21) போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், தில்லிக்கு செல்லும் ஷம்பு எல்லைப் பகுதி, தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் பற்றாக்குறை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(ஜூலை 22) புதுதில்லியில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




















