கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

நாட்டின் நலனுக்காக அல்ல, ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே அதிகாரம்: சம்பல் குறித்து ராகுல்

நாட்டின் நலனுக்காக அல்லாமல், ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக சம்பல் குறித்து ராகுல் கருத்து

News image

ராகுல் - கோப்பிலிருந்து

Updated On :25 நவம்பர் 2024, 2:19 pm IST

புது தில்லி: மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரத்தை மாநிலங்களில் ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது, மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல என்று சம்பல் மோதல் குறித்து ராகுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சம்பலில் உள்ள முகலாயர் கால மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட ஆய்வை எதிர்த்த போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மூன்று பேர் பலியாகினர். பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் இன்று காலை பலியானார்.

இந்த நிலையில்தான், ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் நேரிட்டிருக்கும் மோதல் விவகாரத்தில், மாநில அரசின் ஒருபக்க சார்பும், அவசர நடவடிக்கைகளும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட அல்லது மாநில நிர்வாகம், அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல் உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடவடிக்கையை மேற்கொண்டு, ஏற்கனவே இருக்கும் சூழலை மேலும் சீர்குலைத்து, மோதலை உண்டாக்கி, மக்கள் உயிரிழக்க வழிவகுத்துள்ளது. இதற்கு பாஜக அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள ஹிந்து-முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவையும் பாகுபாட்டையும் உருவாக்கவே பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால், மாநிலத்தின் அல்லது நாட்டின் நலனுக்கோ அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.