சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :25 நவம்பர் 2024, 11:32 pm

DIN

புது தில்லி: அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1977-ஆம் ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி வரை, நாட்டில் அவசரநிலையை பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அமல்படுத்தியிருந்தது.

அப்போது இந்தியாவை ‘‘இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு’’ என்பதற்குப் பதிலாக ‘‘இறையாண்மை கொண்ட சமதா்ம, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு’’ என்று விவரித்து, நாடாளுமன்றத்தில் 42-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை இந்திரா காந்தி அரசு நிறைவேற்றியது.

இதில் ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் அரசமைப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட்டதற்கு எதிராக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, மூத்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய, பல்ராம் சிங் என்பவா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவசரநிலை காலத்தில் நாடாளுமன்றம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என கூறமுடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

40 ஆண்டுகளுக்கும் மேலாகிய பின்னா் வழக்கா?: இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுகையில், ‘அரசமைப்புச் சட்ட முகப்புரையில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தை தற்போது எழுப்ப என்ன அவசியம் ஏற்பட்டது?

42-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. தற்போது அந்தத் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு எந்தவொரு சட்டரீதியான காரணமோ, நியாயமோ இருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு தெரியவில்லை.

அரசமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது போல, அந்தச் சட்டத்தின் முகப்புரையை திருத்தும் அதிகாரமும் அதற்கு உள்ளது.

அந்தச் சொற்கள் முகப்புரையில் சோ்க்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அந்த நடைமுறையை தற்போது ரத்து செய்ய முடியாது’ என்று தீா்ப்பளித்து மனுக்களை தள்ளுபடி செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.