ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகளாக உள்ளதாக சிவசேனை(உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா செய்துள்ள நிலையில், புதிய முதல்வரின் பெயரை இதுவரை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறிவிக்காமல் உள்ளது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 132, சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியின் தலைவரே முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் பதவியை ஷிண்டே இன்று காலை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய சஞ்சய் ரெளத்,
“முதல்வர் யார் என்பதை அமித் ஷாவும் மோடியும் தான் முடிவெடுப்பார்கள். ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் அவர்களின் கட்சிக்காக தனித்து முடிவெடுக்க முடியாது.
இரண்டு கட்சிகளும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகள், பாஜகவின் துணை நிறுவனங்கள்.
பாஜகவுக்குதான் தற்போது பெரும்பான்மை உள்ளது. தனித்து ஆட்சி அமைக்க ஷிண்டே மற்றும் அஜித் பவாரின் கட்சியைக் கூட அவர்கள் உடைப்பார்கள். என்னை பொறுத்தவரை தேவேந்திர ஃபட்னவீஸ்தான் அடுத்த முதல்வர் ஆவார்” எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களிலும் காங்கிரஸ் அங்கம் வகித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.
பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான 29 இடங்கள்கூட எந்த எதிர்க்கட்சியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி!

ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனையில் இணைந்த உத்தவ் கட்சியின் 6 எம்.பி.க்கள்: மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்

கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே

உத்தவ் கட்சியில் பிளவு?: எம்.பி.க்கள் கட்சி மாறாமல் தடுக்க கொறடா உத்தரவு- ரூ.50 கோடி பேரம் என குற்றச்சாட்டு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



