உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ரூ. 1.7 டிரில்லியன் கடன் தள்ளுபடி! ஆனால், பயனில்லை!!

நிதியாண்டு 2024-ல் ரூ. 1.7 டிரில்லியன் கடனை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.

கோப்புப் படம்

Published On :27 நவம்பர் 2024, 7:51 pm IST

நிதியாண்டு 2024-ல் ரூ. 1.7 டிரில்லியன் கடனை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.

மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த தரவுகளின்படி, இந்திய வங்கிகள் 2023-24 நிதியாண்டில் ரூ. 1.7 டிரில்லியன் (ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி) கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே.

2023 ஆம் நிதியாண்டில் ரூ. 2.08 டிரில்லியன் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 2020 ஆம் நிதியாண்டில் ரூ. 2.34 டிரில்லியன் கடன்களும், 2021-ல் ரூ. 2.03 டிரில்லியன் கடன்களும், 2022 ஆம் நிதியாண்டில் ரூ. 1.75 டிரில்லியன் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த நிதியாண்டில், அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 18,317 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 18,264 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 16,161 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.

தனியார் வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ரூ. 11,030 கோடி கடனையும், ஐசிஐசிஐ வங்கி ரூ. 6,198 கோடி கடனையும், ஆக்சிஸ் வங்கி ரூ. 8,346 கோடி கடனையும் தள்ளுபடி செய்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் வங்கி வாரியக் கொள்கைகளின்படி, முழுமையாக வழங்கப்பட்ட செயல்படாத சொத்துக்களைத்தான் (NPAs) வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன.

மேலும், பங்கஜ் சௌத்ரி கூறியதாவது, ``வங்கிகளின் இத்தகைய தள்ளுபடி, கடன் வாங்குபவருக்கு பயனளிக்காது. ஏனெனில், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தும் பொறுப்பில் தொடர்ந்து இருப்பர்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.