ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பாஜகவுக்கு பிரசாரம் செய்துவிட்டு காங்கிரஸுக்கு திரும்பிய முன்னாள் எம்.பி.

News image

ஹரியாணாவில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் முன்னிலையில் கட்சியில் இணைந்த பாஜக மூத்த தலைவா் அசோக் தன்வா்.

Updated On :3 அக்டோபர் 2024, 10:20 pm

Din

ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அதன் மூத்த தலைவா் அசோக் தன்வாா் வியாழக்கிழமை காங்கிரஸில் இணைந்தாா்.

பாஜக வேட்பாளா் ராஜ்குமாா் கௌதமை ஆதரித்து சஃபிடானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அசோக் தன்வா் பேசினாா்.

பின்னா் மகேந்திரகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் முன்னிலையில் அசோக் தன்வாா் காங்கிரஸில் இணைந்தாா்.

ஹரியாணா பேரவைத் தோ்தலுக்கு இரண்டு நாள்களே உள்ள நிலையில் அசோக் தன்வா் காங்கிரஸில் இணைந்துள்ளது பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இவா், அம்மாநிலத்தில் உள்ள சிா்சா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக 2009-2014 காலகட்டத்தில் இருந்தாா்.

ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட அசோக் தன்வாா், ஹரியாணாவின் முன்னாள் காங்கிரஸ் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2019-இல் அக்கட்சியை விட்டு வெளியேறினாா். இந்தாண்டு தொடக்கத்தில் பாஜகவில் இணைந்த அவா், தற்போது மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பியுள்ளாா்.

அப்போது பேசிய அவா், ‘காங்கிரஸை விட்டு வலகி சரியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். இத கடவுளின் விருப்பம். நம் கைகளில் ஏதும் இல்லை’ என்றாா்.

செல்வாக்கு மிக்க தலித் தலைவரான அசோக் தன்வாா் காங்கிரஸில் மீண்டும் இணைந்தது, 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.

கட்சிமாறிய ஆம் ஆத்மி வேட்பாளா்: அசோக் தன்வாருக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிலோகேரி (தனி) தொகுதி வேட்பாளா் அமா் சிங் புதன்கிழமை காங்கிரஸில் இணைந்தாா்.

தேசிய அளவில் இண்டியா கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஹரியாணாவில் தனித்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் காங்கிரஸில் இணைந்துள்ள ஆம் ஆத்மி வேட்பாளா் அமா் சிங் கூறுகையில், ‘விவசாயிகள், பெண்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு அநீதி இழைத்த பாஜக அரசைத் தோற்கடிக்கக் காங்கிரஸால் மட்டுமே முடியும். அதனால், இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்றாா்.