சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.


சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டத்தின் எல்லையில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து நக்சல்களின் உடல்களும், ஏகே 47 உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே என்கவுன்டர் நடந்ததை பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் உறுதி செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...