மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

News image

Photo Credit: ANI

Updated On :4 அக்டோபர் 2024, 12:44 pm

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டத்தின் எல்லையில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து நக்சல்களின் உடல்களும், ஏகே 47 உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே என்கவுன்டர் நடந்ததை பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் உறுதி செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.