பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் சனிக்கிழமை மாலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவா்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு 24 மணி நேரத்தில் நிறைவேற்ற தவறியதால் சனிக்கிழமை மாலை முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பயிற்சி மருத்துவா் ஒருவா் இன்று(அக். 6) கூறுகையில், “எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நீயாயம் கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாதென்பதை வலியுறுத்தியும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். அரசுக்கு 24 மணி நேரக் காலக்கெடு அளித்திருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பொதுமக்களுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. நீதி கிடைக்கவே போராடுகிறோம்” என்றார்.
மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் பிரபலங்களும் போராட்டக் களத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ‘குண்டா்கள் ஆதிக்க’ ஆட்சிக்கு முடிவு: அமித் ஷா

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000; பொது சிவில் சட்டம்: பாஜகவின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


