குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ராஜஸ்தான்: போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்தனர்.

News image
Updated On :7 அக்டோபர் 2024, 10:49 pm IST

ஜெய்ப்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்கள் தினேஷ் குமார் மற்றும் பிரியங்கா குமாரி என அடையாளம் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் என்றும் அவர்கள் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுதிய நிலையில் அவர்களுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக பயிற்சி எஸ்.ஐ.க்கள் பிரியங்கா மற்றும் அவரது சகோதரர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஓ.ஜி கூடுதல் இயக்குநர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற கசிந்த வினாத்தாளைப் பயன்படுத்தினர். இந்த நிலையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஃபியா மன்னன் பூபேந்திர சரணின் சகோதரர் கோபால் சரண் மூலம் வினாத்தாளை சகோதரர்கள் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபால் 2011 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 2014ல் எஸ்.ஐ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே வழக்கில், மஞ்சு பிஷ்னோயின் சகோதரி சந்தோஷியும் பிடிபட்டுள்ளார். தற்போது இருவரும் போலீஸ் காவலில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விசாரனைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 க்கும் மேற்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்களை கைது செய்துள்ள நிலையில், 2021 போலீஸ் தேர்வை மறுஆய்வு செய்யவும், தேர்வை ரத்து செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ராஜஸ்தான் அரசு அமைச்சரவைக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.