தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ராஜஸ்தான்: போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்தனர்.

News image
Updated On :7 அக்டோபர் 2024, 5:19 pm

DIN

ஜெய்ப்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்கள் தினேஷ் குமார் மற்றும் பிரியங்கா குமாரி என அடையாளம் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் என்றும் அவர்கள் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுதிய நிலையில் அவர்களுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக பயிற்சி எஸ்.ஐ.க்கள் பிரியங்கா மற்றும் அவரது சகோதரர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஓ.ஜி கூடுதல் இயக்குநர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற கசிந்த வினாத்தாளைப் பயன்படுத்தினர். இந்த நிலையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஃபியா மன்னன் பூபேந்திர சரணின் சகோதரர் கோபால் சரண் மூலம் வினாத்தாளை சகோதரர்கள் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபால் 2011 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 2014ல் எஸ்.ஐ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே வழக்கில், மஞ்சு பிஷ்னோயின் சகோதரி சந்தோஷியும் பிடிபட்டுள்ளார். தற்போது இருவரும் போலீஸ் காவலில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விசாரனைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 க்கும் மேற்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்களை கைது செய்துள்ள நிலையில், 2021 போலீஸ் தேர்வை மறுஆய்வு செய்யவும், தேர்வை ரத்து செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ராஜஸ்தான் அரசு அமைச்சரவைக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.