தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராஜஸ்தான்: போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்தனர்.

News image
Updated On :7 அக்டோபர் 2024, 5:19 pm

ஜெய்ப்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்கள் தினேஷ் குமார் மற்றும் பிரியங்கா குமாரி என அடையாளம் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் என்றும் அவர்கள் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுதிய நிலையில் அவர்களுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக பயிற்சி எஸ்.ஐ.க்கள் பிரியங்கா மற்றும் அவரது சகோதரர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஓ.ஜி கூடுதல் இயக்குநர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற கசிந்த வினாத்தாளைப் பயன்படுத்தினர். இந்த நிலையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஃபியா மன்னன் பூபேந்திர சரணின் சகோதரர் கோபால் சரண் மூலம் வினாத்தாளை சகோதரர்கள் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபால் 2011 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 2014ல் எஸ்.ஐ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே வழக்கில், மஞ்சு பிஷ்னோயின் சகோதரி சந்தோஷியும் பிடிபட்டுள்ளார். தற்போது இருவரும் போலீஸ் காவலில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விசாரனைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 க்கும் மேற்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்களை கைது செய்துள்ள நிலையில், 2021 போலீஸ் தேர்வை மறுஆய்வு செய்யவும், தேர்வை ரத்து செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ராஜஸ்தான் அரசு அமைச்சரவைக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.