

தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி அக். 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாவோஸ் நாட்டில் 21வது ஆசிய-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று இரண்டு உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.