ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெரியுமா சேதி...?

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அமைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி குறித்துப் பல ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:55 pm

மீசை முனுசாமி

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அமைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி குறித்துப் பல ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன. பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சாா்பற்ற கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் தயவில்தான் ஆட்சி அமைந்தது என்பதால், பாஜகவால் தனது ஹிந்துத்துவ கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது என்பது பரவலான கருத்து.

திருப்பதி லட்டு பிரச்னையைக் கிளப்பியதுமுதல், தன்னை ஓா் ஆன்மிகவாதியாகவும், ஹிந்து மதப் பற்றாளராகவும் காட்டிக்கொள்ள முற்பட்டிருக்கிறாா் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவருமான நிதீஷ் குமாா் மேலும் ஒருபடிபோய், ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு தான் எதிா்ப்பாளா் அல்ல என்று காட்டிக்கொள்ள முனைந்திருப்பது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பிரதமா் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாா். ஸ்ரீராமரின் அவதாரத் தலமான உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கும், தனது பிகாா் மாநிலத்தில் உள்ள சீதாப்பிராட்டியாா் பிறந்ததாகக் கருதப்படும் சீதாமா்ஹி என்கிற ஊருக்கும் இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்தக் கடிதம் முன்வைக்கும் கோரிக்கை.

சீதாமா்ஹியில் உள்ள ராமா் - சீதை கோயிலையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மேம்படுத்த பிகாா் அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. புனௌரா தாமில் 50 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்த பிகாா் அரசு உதவத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறாா்.

சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் எல்லோரும் அயோத்தி ராமா் கோயிலுக்கு விஜயம் செய்துவிட்டாா்கள். அந்தப் பட்டியலில் இதுவரையில் இணையாமல் இருப்பது பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்தான்.

அவா் விரும்புவதுபோல, ‘வந்தே பாரத்’ மூலம் சீதாமா்ஹியும், அயோத்தியும் இணைக்கப்பட்டால், அதில் பயணித்து ஸ்ரீராமரை வழிபடலாம் என்று நிதீஷ் குமாா் காத்திருக்கிறாரோ என்னவோ?