தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

11,000 வைரக்கற்களில் ரத்தன் டாடா உருவம்!

சூரத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர், ரத்தன் டாடாவின் உருவப் படத்தை 11 ஆயிரம் வைரக் கற்கள் கொண்டு உருவாக்கியுள்ளார்.

வைரக் கற்களில் ரத்தன் டாடா முகம் - படம் | எக்ஸ்

Published On :

சூரத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர், மறைந்த இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவப் படத்தை 11 ஆயிரம் வைரக் கற்கள் கொண்டு உருவாக்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின், ரத்தன் டாடாவை பெருமைப்படுத்தும் இந்த முயற்சி சமூக வலைதளத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

வைரத்தில் ரத்தன் டாடா உருவம்

இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த செப். 9ஆம் தேதி காலமானார். வயது மூப்பு தொடர்பான பிரச்னைகளுக்காக மும்பையில் உள்ள பிரேச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு தொழிலதிபகள், அரசியல் தலைவர்கள், நடிகை நடிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். பின்னர் அவரின் உடல் வோா்லியில் உள்ள மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சூரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 11 ஆயிரம் வைரக் கற்களைக் கொண்டு ரத்தன் டாடாவின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார்.

இதுவரை இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் மக்கள் லைக் செய்துள்ளனர். பல வைரங்கள் சேர்ந்தாலும், அந்த ஒரு வைரத்திற்கு (ரத்தன் டாடா) ஈடாகாது என்றும், ஒரு வைரத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான வைரக் கற்கள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.