மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்...

News image

PTI

Updated On :15 அக்டோபர் 2024, 12:07 pm

கர்நாடகத்தில் தசரா விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் நாளை(அக். 16) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை(அக். 16) விடுமுறை அளித்து பெங்களூரு நகர் மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷா இன்று(அக். 15) மாலை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் வால்மீகி ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை(அக்.17) பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை(அக்.15) காலை 8.30 மணி நிலவரப்படி, பெங்களூரில் 33 மி.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.