/

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் விடுமுறை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, 3 நாள்கள் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 7:36 pm

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, 3 நாள்கள் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தோ்தலை முன்னிட்டு அரசு, தனியாா் பள்ளிகளுக்கு ஏப். 6 முதல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு, தனியாா் கல்லூரிகளுக்கும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (ஏப். 8, 9, 10) மூன்று நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.