6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: சத்தீஸ்கர் முதல்வர்!

அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது..

News image
முதல்வர் விஷ்ணு தியோ சாய்
Updated On :16 அக்டோபர் 2024, 6:33 am

பிடிஐ

சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு சத்தீஸ்கரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3.9 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த உயர்வு இந்தாண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம், மகாராஷ்டிர அரசு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 46 சதவீதமாகக் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு மேலும் 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.