சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சத்தீஸ்கரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3.9 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த உயர்வு இந்தாண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம், மகாராஷ்டிர அரசு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 46 சதவீதமாகக் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு மேலும் 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்
கடும் நிதி நெருக்கடியில் ஹிமாசல் அரசு: ஊதியம் கொடுக்க முடியாமல் திணறல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு!
நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே சீர்குலைக்கும் மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


