அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: சத்தீஸ்கர் முதல்வர்!
அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது..


சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சத்தீஸ்கரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3.9 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த உயர்வு இந்தாண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம், மகாராஷ்டிர அரசு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 46 சதவீதமாகக் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு மேலும் 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...