மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இப்படியுமா செய்வீங்க? சிறுநீரைக் கலந்து சமையல்!

சமைக்கப்படும் உணவில் சிறுநீரை கலந்த பணிப்பெண்...

News image

படம் | எக்ஸ் தளம்

Updated On :16 அக்டோபர் 2024, 7:54 pm IST

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியின் உச்சத்துக்கே இட்டுச் சென்றுள்ளது.

காஸியாபாத்தின் சாந்திநகர் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிபுரியும் பெண்மணி ஒருவர், அங்கு சமைக்கப்படும் உணவில் தனது சிறுநீரை கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலப்படமான உணவை தினமும் சாப்பிட்டு வந்துள்ள தொழிலதிபர் குடும்பத்தினருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதை அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். எனினும், தொடர்ந்து வயிற்று உபாதைகள் நீடிக்கவே, தாங்கள் வீட்டில் சப்பிடும் உணவில் ஏதேனும் கலப்படம் இருக்கலாம் என்ற சந்தேகம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கள் வீட்டின் சமையலறையில் கண்காணிப்பு கேமரா ஒன்றை ரகசியமாக பொருத்தி கண்காணித்து வந்துள்ளனர். அப்போதுதான், இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, உணவை சமைக்கும்முன், சமையலறையில் இருக்கும் ஃபிரிட்ஜ் பக்கவாட்டில் சற்று மறைவாக நின்றுகொண்டு, அநாகரிகமான முறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார் அந்த வீட்டில் பணியமர்த்தப்பட்டுள்ள வேலைக்கார பெண்மணி.

அதன்பின், அந்த பாத்திரத்தையே சமைக்கவும் பயன்படுத்தும் அருவறுக்கத்தக்க காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. இதைக் கணடதும், ஒருகணம் உறைந்துபோன அந்த தொழிலதிபர் வீட்டுப் பணியாள் மீது காவல்துறையில் ஆதாரத்துடன் புகாரளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வீட்டு வேலைக்கார பெண்மணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கேமரா காட்சிகளைக் கண்டபின், தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார் அந்த பெண்மணி.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்மணி அந்த வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.