
தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 18) பிற்பகலில் இரண்டு பேர் தங்களை கூரியர் பணியாளர்களாகக் காட்டிக் கொண்டு, ஷிபுவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் ஷிபுவையும் அவரது மனைவியையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்த்த ஷிபுவை தாக்கிவிட்டு, அங்கிருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர்.
இதையும் படிக்க: வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல: விஜய்
இந்த சம்பவம் முழுவதையும் ஷிபு தனது மகனுக்கு போனில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினரிடம் ஷிபுவின் மகன் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஷிபுவையும் அவரது மனைவியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.