ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி நகை, பணம் கொள்ளை!

ஓய்வுபெற்ற விஞ்ஞானியை தாக்கிவிட்டு, அவரது வீட்டில் துணிகரக் கொள்ளை

News image
Updated On :20 அக்டோபர் 2024, 12:34 pm IST

தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 18) பிற்பகலில் இரண்டு பேர் தங்களை கூரியர் பணியாளர்களாகக் காட்டிக் கொண்டு, ஷிபுவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் ஷிபுவையும் அவரது மனைவியையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்த்த ஷிபுவை தாக்கிவிட்டு, அங்கிருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் முழுவதையும் ஷிபு தனது மகனுக்கு போனில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினரிடம் ஷிபுவின் மகன் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஷிபுவையும் அவரது மனைவியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.