டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மகாராஷ்டிரத்தில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினா் நக்ஸல்கள் இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
காவல்துறையினா் நக்ஸல்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Updated On :21 அக்டோபர் 2024, 9:51 pm

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினா் நக்ஸல்கள் இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:

நக்ஸல்கள் நடமாட்டம் அதிகமுள்ள சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாவட்ட காவல்துறையின் சி60 கமாண்டோ குழுவினா் 22 போ் மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையின் குழுவினா் இணைந்து வனப்பகுதியின் இருவேறு இடங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

பதுங்கியிருந்த நக்ஸல்கள் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் 5 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.

மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள நிலையில், கிழக்கு மகாராஷ்டிர வனப்பகுதியில் நக்ஸல்கள் குழு ஒன்றுகூடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனா். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.