2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Published On :

சத்தீஸ்கா் மாநிலம், பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் படை வீரா்கள், நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் வியாழக்கிழமை ஈடுபட்டு இருந்தனா். அப்போது நக்ஸல்களுக்கும், மாவட்ட ரிசா்வ் படை வீரா்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் கொல்லப்பட்ட 2 நக்ஸல்களின் உடல்ங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதவிர வேறு நக்ஸல்கள் அப்பகுதியில் பதுங்கியுள்ளனரா எனத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இவா்களையும் சோ்த்து நிகழாண்டில் இதுவரை இப்பகுதியில் 22 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக கடந்த 3-ஆம் தேதி 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். கடந்த 2025-ஆம் ஆண்டில் 285 நக்ஸல்கள் உயிரிழந்தனா் என்று அவா் கூறினாா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்துக்கு வரும் மாா்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவு கட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.