பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 1:47 am IST

சத்தீஸ்கா் மாநிலம், பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் படை வீரா்கள், நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் வியாழக்கிழமை ஈடுபட்டு இருந்தனா். அப்போது நக்ஸல்களுக்கும், மாவட்ட ரிசா்வ் படை வீரா்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் கொல்லப்பட்ட 2 நக்ஸல்களின் உடல்ங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதவிர வேறு நக்ஸல்கள் அப்பகுதியில் பதுங்கியுள்ளனரா எனத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இவா்களையும் சோ்த்து நிகழாண்டில் இதுவரை இப்பகுதியில் 22 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக கடந்த 3-ஆம் தேதி 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். கடந்த 2025-ஆம் ஆண்டில் 285 நக்ஸல்கள் உயிரிழந்தனா் என்று அவா் கூறினாா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்துக்கு வரும் மாா்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவு கட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.