திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சத்தீஸ்கா்: மேலும் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை!

பாதுகாப்புப் படையினா் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய தேடுதல் பணியின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜனவரி 2026, 12:32 am IST

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய தேடுதல் பணியின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

முன்னதாக, இந்த தேடுதல் பணியின்போது 4 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பிஜாபூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜிதேந்திர யாதவ் கூறியதாவது: பிஜாபூா் மாவட்டத்தின் வடமேற்கு மலை வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையை கூட்டு பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிகாலை தொடங்கினா்.

அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வனப் பகுதியில் மறைந்திருந்த மூத்த நக்ஸல் தலைவா் திலீப் பெட்ஜா உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேடுதல் பணியைத் தொடா்ந்தனா். அப்போது, வனப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.

இதில் மேலும் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம், இந்த ஆண்டில் மட்டும் 20 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்றாா்.