மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் மஹாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க : தீபாவளிக்கு முந்தைய நாள் பொது விடுமுறை! புதுச்சேரி அரசு
இரு கூட்டணியில் உள்ள கட்சிகளும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தாலும், சில தொகுதிகளில் யாருக்கு ஒதுக்குவது என்று கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மகா விகாஸ் அகாதியில் இடம்பெற்றுள்ள சரத் பவார் கூறியதாவது:
மகா விகாஸ் அகாதி கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 95 சதவிகித இடங்களில் ஒருமனதாக ஒதுக்கீடு நிறைவடைந்துவிட்டது. பிற தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைந் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் ஆட்சியை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். மக்களின் பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய ஆட்சியாளர்களால் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. நாங்கள் செய்வோம் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாராமதி தொகுதியில் வாக்களித்தார் ரோஹித் பவார்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


