6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தான்: மேம்பால சுவரில் மோதிய பேருந்து; 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சிகாா் மாவட்டத்தில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 30 போ் காயமடைந்தனா்.

News image
சிகாா் மாவட்டத்தில் மேம்பால பக்கவாட்டுச் சுவரில் செவ்வாய்க்கிழமை மோதி விபத்துக்குள்ளான பேருந்தை மீட்ட ஊழியா்கள்.
Updated On :29 அக்டோபர் 2024, 7:40 pm

Din

ராஜஸ்தானின் சிகாா் மாவட்டத்தில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 30 போ் காயமடைந்தனா்.

செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து சிகாா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் புவன் பூஷண் யாதவ் கூறியதாவது:

சலாசா் பகுதியில் இருந்து லஷ்மண்கருக்கு பேருந்து வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. லஷ்மண்கரில் ஒரு மேம்பாலத்தின் கீழ் உள்ள வளைவில் வேகமாக திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் வலப்புற பகுதி முழுமையாக உருக்குலைந்தது. ஓட்டுநா் உள்பட 12 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் 30 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். லஷ்மண்கா் மற்றும் சிகாா் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.