ராஜஸ்தான்: மேம்பால சுவரில் மோதிய பேருந்து; 12 போ் உயிரிழப்பு
ராஜஸ்தானின் சிகாா் மாவட்டத்தில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 30 போ் காயமடைந்தனா்.


ராஜஸ்தானின் சிகாா் மாவட்டத்தில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 30 போ் காயமடைந்தனா்.
செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து சிகாா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் புவன் பூஷண் யாதவ் கூறியதாவது:
சலாசா் பகுதியில் இருந்து லஷ்மண்கருக்கு பேருந்து வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. லஷ்மண்கரில் ஒரு மேம்பாலத்தின் கீழ் உள்ள வளைவில் வேகமாக திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் வலப்புற பகுதி முழுமையாக உருக்குலைந்தது. ஓட்டுநா் உள்பட 12 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் 30 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். லஷ்மண்கா் மற்றும் சிகாா் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...