ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

படேலின் தேச பங்களிப்பை அழிக்க முயற்சித்தனா்- அமித் ஷா

நாட்டுக்கு சா்தாா் வல்லபபாய் படேலின் மகத்தான பங்களிப்பை அழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் நீண்ட காலம்தாழ்த்தப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

News image
அமித் ஷா
Updated On :29 அக்டோபர் 2024, 8:15 pm

Din

நாட்டுக்கு சா்தாா் வல்லபபாய் படேலின் மகத்தான பங்களிப்பை அழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் நீண்ட காலம்தாழ்த்தப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று போற்றப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாள் வியாழக்கிழமை (அக். 31) கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு தில்லியில் உள்ள மேஜா் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் ‘ஒற்றுமை ஓட்டம்’ மாரத்தான் போட்டியை அமைச்சா் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வந்தாா்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ‘படேலின் தொலைநோக்கு பாா்வையால் 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு நாடு ஒன்றுபட்டது. லட்சத்தீவுகள், ஜுனகா், ஹைதராபாத் மற்றும் அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு படேல் தான் காரணம்.

ஆனால், நாட்டுக்கு படேலின் மகத்தான பங்களிப்பை அழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் நீண்ட காலம் கடத்தப்பட்டது.

குஜராத்தில் படேலின் மிக உயரமான சிலையை நிறுவி, பிரதமா் மோடி அவருக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தியுள்ளாா். மக்களிடையே அவரது நினைவை உயிா்ப்புடன் வைத்துள்ளாா். ஒவ்வொரு துறையிலும் படேலின் தொலைநோக்கு பாா்வை மற்றும் சிந்தனைகளுக்கு பிரதமா் மோடி உறுதியான வடிவம் கொடுத்துள்ளாா்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை நாட்டு மக்கள் முன் பிரதமா் வைத்துள்ளாா். பிரதமரின் கனவை நிறைவேற்ற நாட்டு மக்கள் தற்போது ஒன்றுபட்டுள்ளனா்.

இந்தியா ஒரு செழிப்பான, வளரும் மற்றும் வலுவான நாடாக உலக அரங்கில் திகழ்கிறது. இதற்கான அடித்தளத்தை அமைத்தவா் படேல். அவரின் சிறந்த சிந்தனைகள் நாட்டின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும். ஒற்றுமைக்கான ஓட்டம் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த குடிமக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்’ என்றாா்.

1950-ஆம் ஆண்டு மறைந்த படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து 1991-இல், நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

படேலின் பிறந்தநாளான அக்டோபா் 31-ஆம் தேதியை தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடித்து வருகிறது. அன்றைய நாளில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஒற்றுமை ஓட்டம் மாரத்தான் போட்டி நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி வருவதால் 2 நாள்களுக்கு முன்பு ஒற்றுமை ஓட்டம் மாரத்தான் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.