6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீா்: 27 மணி நேர மோதலுக்குப் பிறகு மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூா் செக்டாரில் 27 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டை தொடா்ந்து மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது.

News image
அக்னூா் செக்டாரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்திய பாதுகாப்புப் படையினா்.
Updated On :29 அக்டோபர் 2024, 7:47 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூா் செக்டாரில் 27 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டை தொடா்ந்து மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூா் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே திங்கள்கிழமை பயணித்த ராணுவ ஆம்புலன்ஸ் மீது 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, ராணுவ வீரா்களும் பதிலுக்கு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதி ஒருவா் உயிரிழந்தாா்.

அங்கு எஞ்சிய 2 பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு தொடா்ந்து நீடித்தது. சுமாா் 27 மணி நேரம் நீடித்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில், அக்னூா் செக்டாரில் உள்ள ஜோக்வான் என்ற சிற்றூருக்கு அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகளையும் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 3 பயங்கரவாதிகளும் எல்லை தாண்டி ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2 வாரங்களில் ஜம்மு-காஷ்மீரில் 7 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 2 ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

இதன் காரணமாக அங்குள்ள எல்லை மாவட்டங்களான ரஜெளரி மற்றும் பூஞ்சின் அடா்ந்த காட்டுப் பகுதிகளில், நவீன கண்காணிப்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்களுடன் கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.