கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 7,995 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 7,995 போட்டியிடவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

News image

மகாராஷ்டிர சட்டப்பேரவை - PTI

Updated On :30 அக்டோபர் 2024, 7:29 pm IST

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 7,995 போட்டியிடவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நவ. 4-ல் இறுதிப் பட்டியல்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதியில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனை, அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே வேட்பு மனுத் தாக்கல் கடைசி நிமிடம் வரை தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.

மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனை, சரத் பவார் பிரிவிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இதோடு மட்டுமின்றி வன்சித் பகுஜன் அகாதி, மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா, அகில இந்திய மஜ்லீஸ் - இ - இத்தாஹாதுல் முஸ்லீமின் கட்சியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது,

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு நவம்பர் 4ஆம் தேதி வேட்புமனுக்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும், இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.