ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரம், தெலங்கானாவில் வெள்ளம்: 8 பேர் பலி

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.

News image
மகபூபாபாத் மாவட்த்தில் சூழ்ந்துள்ள மழைநீர்.
Updated On :1 செப்டம்பர் 2024, 8:17 am

DIN

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 4 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிலர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மகபூபாபாத்-கேசமுத்ரம் இடையேயான ரயில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளம்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளம்.

விஜயவாடாவிலிருந்து செல்லும் 12 ரயில் சேவைகளை ரத்து செய்து மத்திய தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விஜயவாடா, செகந்திராபாத், குண்டூர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செல்லும் 2 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கான தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில் ரத்து, மாற்று பாதை விவரங்களை 044-253549995, 044-25354151 என்ற எண்களில் தொடர்புகொண்டு அறியலாம். இதனிடையே வெள்ளம் காரணமாக பள்ளிகள் அனைத்திற்கும் நாளை(செப். 2) விடுமுறை அறிவித்து ஹைதராபாத் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.