சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இன வெறியர்களால்தான் இந்தியா கூட்டணி உருவானதாகத் தெரிகிறது: மணிப்பூர் முதல்வர்

ஹிமந்த பிஸ்வா சர்மா மீது தேஜஸ்வி யாதவ் தெரிவித்த கருத்துக்கு மணிப்பூர் முதல்வர் எதிர்ப்பு

News image
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் (கோப்புப் படம்)- Instagram | Biren Singh
Updated On :1 செப்டம்பர் 2024, 5:37 am

DIN

அஸ்ஸாம் முதல்வர் மீது இனவெறி கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேஜஸ்வி யாதவ் மீது மணிப்பூர் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜும்மா பிரார்த்தனைகளுக்காக இரண்டு மணிநேர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கும் நடைமுறையை ரத்து செய்வதாக அஸ்ஸாம் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், முஸ்லீம்களுக்காக எதிராக செயல்படுவதாகக் கூறி, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை `சீனப் பதிப்பு’ என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேஜஸ்வி யாதவுக்கு பதிலளிக்கும் விதமாக ஹிமந்த பிஸ்வா சர்மா ``இரண்டு மணி நேர ஜும்மா இடைவேளையை நீக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு அல்ல. அனைத்து இந்து மற்றும் முஸ்லீம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் முடிவே.

இந்த முடிவை சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தபோது, அவையில் இருந்த எந்த முஸ்லீம் எம்.எல்.ஏ.வும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அஸ்ஸாம் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 126 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் முஸ்லீம்களே’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் முதல்வரான, பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் ``நமது நாட்டின் வரலாறு மற்றும் புவியியல் பற்றி அறிவற்ற இன வெறியாளர்களால்தான் இந்தியா கூட்டணி உருவானதாகத் தெரிகிறது. தேஜஸ்வி யாதவ்தான் வடகிழக்கு மக்களை இனவெறிக்கு உட்படுத்துகிறார்.

நாட்டின் பிற பகுதிகளைப் போலவே நாங்களும் இந்தியர்களே; இதை நாங்கள் நிரூபிக்கத் தேவையில்லை. இருப்பினும், வடகிழக்கை நோக்கிய இந்தியா கூட்டணியின் இந்த இனவெறி நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.