நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இன வெறியர்களால்தான் இந்தியா கூட்டணி உருவானதாகத் தெரிகிறது: மணிப்பூர் முதல்வர்

ஹிமந்த பிஸ்வா சர்மா மீது தேஜஸ்வி யாதவ் தெரிவித்த கருத்துக்கு மணிப்பூர் முதல்வர் எதிர்ப்பு

News image

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் (கோப்புப் படம்) - Instagram | Biren Singh

Updated On :1 செப்டம்பர் 2024, 11:07 am IST

அஸ்ஸாம் முதல்வர் மீது இனவெறி கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேஜஸ்வி யாதவ் மீது மணிப்பூர் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜும்மா பிரார்த்தனைகளுக்காக இரண்டு மணிநேர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கும் நடைமுறையை ரத்து செய்வதாக அஸ்ஸாம் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், முஸ்லீம்களுக்காக எதிராக செயல்படுவதாகக் கூறி, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை `சீனப் பதிப்பு’ என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேஜஸ்வி யாதவுக்கு பதிலளிக்கும் விதமாக ஹிமந்த பிஸ்வா சர்மா ``இரண்டு மணி நேர ஜும்மா இடைவேளையை நீக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு அல்ல. அனைத்து இந்து மற்றும் முஸ்லீம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் முடிவே.

இந்த முடிவை சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தபோது, அவையில் இருந்த எந்த முஸ்லீம் எம்.எல்.ஏ.வும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அஸ்ஸாம் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 126 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் முஸ்லீம்களே’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் முதல்வரான, பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் ``நமது நாட்டின் வரலாறு மற்றும் புவியியல் பற்றி அறிவற்ற இன வெறியாளர்களால்தான் இந்தியா கூட்டணி உருவானதாகத் தெரிகிறது. தேஜஸ்வி யாதவ்தான் வடகிழக்கு மக்களை இனவெறிக்கு உட்படுத்துகிறார்.

நாட்டின் பிற பகுதிகளைப் போலவே நாங்களும் இந்தியர்களே; இதை நாங்கள் நிரூபிக்கத் தேவையில்லை. இருப்பினும், வடகிழக்கை நோக்கிய இந்தியா கூட்டணியின் இந்த இனவெறி நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.