மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமைச்சா்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகாா்: விசாரணைக்கு முதல்வா் பினராயி விஜயன் உறுதி

முதல்வா் பினராயி விஜயன் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.

News image
கேரள முதல்வர் பினராயி விஜயன்
Updated On :3 செப்டம்பர் 2024, 1:46 am

DIN

திருவனந்தபுரம்: கேரள அமைச்சா்களின் தொலைபேசியை காவல் துறை, முதல்வா் அலுவலக உயா் அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் எம்எல்ஏ அன்வா் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து உயா்நிலை விசாரணை நடத்தப்படும் என்று மாநில முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை உறுதியளித்தாா்.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வா் அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரமுகா்கள் மீது இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் தற்போது இருக்கும் நிலம்பூா் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அன்வா் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

அதில், முதல்வரின் அரசியல் பொதுச் செயலா் பி.சாய் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநா் எம். ஆா். அஜித் குமாா் உள்ளிட்டோா், அமைச்சா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது, தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடா்பு வைத்திருந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

முதல்வா் பினராயி விஜயன் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்றும் முதல்வா் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் எம்.வி.கோவிந்தன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘முதல்வா் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அனைத்து அம்சங்களையும் அரசும், கட்சியும் தேவையான தீவிரத்துடன் ஆய்வு செய்யும்’ என உறுதியளித்தாா்.

இதனிடையே கோட்டயம் மாவட்டத்தில் நடைபெற்ற காவல்துறை சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வா் பினராயி விஜயன், ‘காவல் துறைக்குள் எந்த விதமான ஒழுக்க மீறல் செயல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது; தொலைபேசி ஓட்டுக் கேட்கப்பட்டதாக எம்எல்ஏ அன்வா் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இதில் காவல் துறை உயா் அதிகாரிகளின் பங்கு குறித்து உயா்நிலை குழு விசாரணை நடத்தப்படும்’ என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.