மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவா் பற்றி தவறான கருத்துகளுடன் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க சிபிஐயிடம் கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.
உயிரிழந்த பெண் மருத்துவரின் புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் வெளியான மோசமான பதிவுகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைக்குமாறு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த உயா்நீதின்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமா்வு, மனுவில் இணைக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகளில் பெண் மருத்துவரின் புகைப்படத்துடன் சமூகத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்துகள் உள்ளன என்று கூறியது.
இந்தப் பதிவுகளை முடக்க வழிகள் குறித்து சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அசோக் குமாா் சக்கரவா்தியிடம் கேட்ட நீதிபதிகள் வரும் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
தொடர்புடையது
சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்!
சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்: சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் தட்டுப்பாடு வதந்தி: காஷ்மீரில் பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மக்கள்
முன் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை: ஆட்சியா்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


