சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள மலாவிக்கு 1,000 மெட்ரிக் டன் அரிசி: இந்தியா மனிதாபிமான உதவி

வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவிக்கு 1,000 மெட்ரிக் டன் (10 லட்சம் கிலோ) அரிசியை மனிதாபிமான உதவியாக இந்தியா அனுப்பி வைத்தது.

News image

மலாவிக்கு 1,000 மெட்ரிக் டன் அரிசி - படம்: ரண்தீா் ஜெய்ஸ்வாஸ்

Updated On :9 செப்டம்பர் 2024, 3:27 am IST

வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவிக்கு 1,000 மெட்ரிக் டன் (10 லட்சம் கிலோ) அரிசியை மனிதாபிமான உதவியாக இந்தியா அனுப்பி வைத்தது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாஸ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மலாவி மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் 1,000 மெட்ரிக் டன் அரிசி அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. ‘எல் நீனோ’ விளைவு காரணமாக மலாவி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவுத் தேவையைச் சமாளிக்க இந்தியா இந்த உதவியை அளித்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.

உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை செய்தது. அதே நேரத்தில், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், குறிப்பிட்ட நாடுகளின் அடிப்படை உணவுத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு அவ்வப்போது அனுமதித்து வருகிறது.

இதற்கு முன்பும், மலாவி, மலேசியா, நேபாளம், கேமரூன், கினியா, பிலிப்பின்ஸ், ஷெசல்ஸ், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.