எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

குளத்தில் சடலங்களாகக் கிடந்த காணாமல் போன சிறுமிகள்!

உடலில் காயங்கள் ஏதும் இல்லையென முதற்கட்டப் பார்வையில் தகவல்

News image

கோப்புப் படம்

Updated On :8 செப்டம்பர் 2024, 4:34 pm IST

காணாமல் போன சிறுமிகளை தேடப்பட்டு வந்த நிலையில், குளத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா கிராமத்தில் 12, 16 வயதுடைய சிறுமிகள் இருவர் வைக்கோல் சேகரிக்க, சனிக்கிழமை பிற்பகலில் சென்றுள்ளனர். ஆனால், நள்ளிரவு வரை அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர், அப்பகுதி முழுவதும் தேடி வந்துள்ளனர்.

இருப்பினும், சிறுமிகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் சிறுமிகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி ஒருவரின் தாயார், ஞாயிற்றுக்கிழமை காலையில் குளத்திற்கு சென்றபோது, காணாமல் போன சிறுமிகளின் உடல்கள் இறந்த நிலையில் குளத்தில் மிதப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமிகளின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சிறுமிகளின் உடல்களில் எந்தவித காயமும் இல்லையென முதற்கட்டப் பார்வையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.