ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

சீனாவில் புதிய தீநுண்மி கண்டுபிடிப்பு

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய தீநுண்மி ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :9 செப்டம்பர் 2024, 4:01 am IST

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய தீநுண்மி ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால் பரவும் இந்தத் தீநுண்மிக்கு ‘ஈர நில தீநுண்மி’ (வெட்லேண்ட் வைரஸ் - வெல்வ்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதன்முதலில் 62 வயது நபரிடம் கண்டறியப்பட்ட இந்த தீநுண்மி தொற்று, தொடா் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. இந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காய்ச்சல், மயக்கம், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.

அவா்கள் அனைவரும் சிகிச்சையில் குணமடைந்தாலும், எலி மூலம் நடத்தப்பட்ட சோதனையில் இந்தத் தீநுண்மி மூளை நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டது என்று தெரியவந்துள்ளது.