மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் அண்மையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது.
இதையடுத்து ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருவதால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(செப். 10) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் இன்று(செப். 10) அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதால் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மேற்கண்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி: ஆட்சியா் அலுவலகத்தில் மின்தூக்கி சீரமைப்பு!

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மறுப்பு

மாணவா் விடுதியில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவில் 800 கி.மீ. தொலைதூர இலக்கை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



