
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி மறைவு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளப் பதிவு
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி சீதாராம் யெச்சூரியுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இடதுசாரிகளின் முக்கியத் தலைவராக இருந்தவர். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர். யெச்சூரியின் குடும்பத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.