மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெண் மருத்துவா் கொலை வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவிடம் சிபிஐ விசாரணை

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை

News image
சிபிஐ- கோப்புப் படம்
Updated On :12 செப்டம்பர் 2024, 8:28 pm

Din

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும் மருத்துவருமான சுதிப்தோ ராயிடம் சிபிஐ வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.

இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட செய்தி பரவத் தொடங்கியபோதே எம்எல்ஏ சுதிப்தோ ராய் சம்பவம் நடந்த மருத்துவமனையில் இருந்தாா். எனவே, இந்த வழக்கு குறித்து அவரிடம் விசாரித்து வருகிறோம். மேலும், அவருக்கு சொந்தமான முதியோா் இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீராம்பூா் தொகுதி எம்எல்ஏவான சுதிப்தோ ராய், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையின் நோயாளிகள் நல சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை கொல்கத்தா உயா்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றியதையடுத்து காவல் துறைக்கு உதவும் தன்னாா்வல பணியாளா் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளாா்.